Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
கண்ணிநுண்சிறுத்தாம்பு
 தனியன்கள்
அவிதித விஷயாந்தரசடாரே: உபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவசாத் ததேகசேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
வேறொன்றும்நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வாரவரே யரண்.
பாசுரங்கள்
* கண்ணிநுண்நிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன், என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே.                     ---1)

நாவினால்நவிற்றி இன்பமெய்தினேன்
மேவினே;ன அவன்பொன்னடிமெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே.                            ---2)

திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா -
ளுரியனாய், அடியேன் பெற்றநன்மையே.             ---3)

நன்மையால்மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலில்
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் -
தன்மையான், சடகோபனென்நம்பியே.                ---4)

நம்பினேன் பிறர்நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையுமுன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு -
அன்பனாய், அடியேன் சதிர்த்தேனின்றே.            ---5)

இன்றுதொட்டும் எழுமையுமெம்பிரான்
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான்
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி
என்றுமென்னை இகழ்விலன் காண்மினே.          ---6)

கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டைவல்வினை பாற்றியருளினான்
எண்டிசையும் அறியவியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோபனருளையே.                        ---7)

அருள்கொண்டாடும் அடியவரின்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.                ---8)

மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு, ஆட் -
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.                        ---9)

* பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான்
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி!
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.--10)

 *அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா -
மன்பன், தென்குருகூர் நகர்நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிசொன்னசொல் -
நம்புவார்பதி, வைகுந்தங்காண்மினே. 

( கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. )

*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   

Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!