Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Astrological Signs லக்னம் அமைப்பது எப்படி? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் முன்னர் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறிவிடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அ றிந்தோம்.

கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் குறிப்பதே பஞ்சாங்கத்தின் முக்கிய பணியாகும். எனவே 'மேஷம்' முதல் 'மீனம்' வரையிலான ராசி மண்டலத்தின் 12 கட்டங்களில் சில கட்டங்கள் தவிர மற்ற கட்டங்களில் இந்த க்ரஹங்கள் சேர்ந்தோ தனித்தோ காணப்படும். க்ரஹங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கட்டம் "சுத்தம்" என்று குறிப்பிடப்படும்.

ஸ்தான சுத்தம்:-
உபநயனம், சீமந்தம், க்ருஹப்ரவேசம், விவாஹம் ஆகிய மிக முக்கிய காரியங்களைப் பண்ண தேர்ந்தெடுக்கும் லக்னத்திலிருந்து (அதையும் சேர்த்து) ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கொண்டு வரும்போது சில குறிப்பிட்ட இடங்கள் க்ரஹங்களின்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்த்ரம். இது பற்றிய விதிகளை நம் (பரந்தாமன்) பஞ்சாங்கத்தில் 21ம் பக்கம் "சில முக்கியமான சுப காரியங்கள் பண்ண சிறந்த அம்சங்கள்" என்ற தலைப்பின் கீழ் வழங்கியுள்ளோம். அவ்விதிகளின்படி விவாஹத்திற்கு 7மிடம், உபநயனத்திற்கும் சீமந்தத்திற்கும் 8மிடமும், க்ருஹப்ரவேசத்திற்கு 12மிடமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே லக்னம் அமைக்க முற்படும்போது எந்த க்ருஹத்தில் க்ருஹங்களின்றி சுத்தமாக இருக்கிறதோ அதை பற்றிக்கொண்டு பின்நோக்கி எண்ணி லக்னத்தை அமைக்கவேண்டும்.

க்ரஹங்களின் வேகம் மற்றும் இடமாற்றம்:- பஞ்சாங்கங்களில் உள்ள மாதாந்திர ராசிக் கட்டத்தில் சந்திர தவிர மற்ற அனைத்துக் க்ரஹங்களையும் போட்டிருப்பார்கள். சந்திரன் மிகவும் வேகமான க்ரஹம் ஒரு மாதத்திற்குள் சுமார் 12 வேறு வீடுகளுக்கு மாறிவிடுவான். புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய க்ரஹங்களும் ஒரு மாதத்திற்குள் வீடு மாறிவிடுவார்கள். அவர்கள் மாறும் தேதியை ராசிக்கட்டத்தின் மையத்தில் உள்ள கட்டத்தில் குறிப்பிடுவது வழக்கம். எனவே மாதத்தின் முதல் தேதியில் க்ரஹங்கள் உள்ள நிலைக்கு வரையப்பட்ட ராசிக் கட்டத்தில் உள்ளபடியே மாதம் முழுவதும் கட்டங்கள் காலியாக இருக்கும் என்று எண்ணாமல், நாம் பார்க்கும் தேதிக்கு க்ரஹங்கள் மாறுதல் அடைந்துள்ளனவா என்பதற்கும் அன்றைய தேதியில் சந்திரன் எங்கிருக்கிறான் என்பதையும் பார்த்து ஸ்தான சுத்தத்தைத் தீர்மானிக்கவேண்டும்.

சந்திரனை அறிதல்:-
சந்திரனை அறிவதற்கு நக்ஷத்திரங்களைப் பற்றியும் பாதங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். கீழுள்ள ராசிக் கட்டத்தில் நக்ஷத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் உண்டு என்பது பெரும்பாலோருக்குத் தெரியும். ஒரு ராசியில் மொத்தம் ஒன்பது பாதங்கள் மட்டுமே அடங்கும். ஏனென்றால் ஒரு ராசி என்பது 30 டிகிரி. மொத்தம் உள்ள 360 டிகிரியும் 30 டிகிரி கொண்ட 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டதுபோல், ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்ட 27 நக்ஷத்திரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு பாதத்திற்கு சுமார் 3.33 டிகிரி. எனவே முதல் ராசயில் மூன்றாவது ராசயின் முதல் பாதம் மட்டுமே அடங்குகிறது.

பூரட் -4
உத்ரட்டாதி -1,2,3,4
ரேவதி-1,2,3,4
அஸ்வி1,2,3,4
பரணி1,2,3,4
கார்த் -1
கார்த்-2,3,4
ரோகி-1,2,3,4 ம்ருகசீ-1,2
ம்ருகசீ-3,4
திருவரு1,2,3,4
புனர்-1,2,3
அவிட்-3,4
சதய -1,2,3,4
பூரட் - 1,2,3

ராசி மண்டல அமைப்பு

புனர்-4
பூசம்-1,2,3,4
ஆயில்-1,2,3,4
உத்ரா - 2,3,4
திருஓ-1,2,3,4
அவிட்-1,2
மகம்-1,2,3,4
பூரம்-1,2,3,4
உத்ரம்-1
மூலம்-1,2,3,4 பூராட -1,2,3,4 உத்ரா - 1 விசாக - 4
அநுஷ - 1,2,3,4
கேட்-1,2,3,4
சித்தி-3,4
ஸ்வாதி - 1, 2,3,4 விசாக -1,2,3
உத்ரம்-2,3,4
ஹஸ்த -1,2,3,4
சித்தி-1,2
Astrological Signs எனவே தற்போது பஞ்சாங்கத்தில் அன்றைக்கு என்ன நக்ஷத்திரம் என்பதை வைத்து ராசியை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். எனவே அந்த ராசியில் சந்திரன் இருப்பதைக் கொண்டு ஸ்தான சுத்தமுள்ள லக்னம் தீர்மானிக்கவேண்டும்.

பொதுவாக ஆகாத நாட்களை விலக்குதல்:-
இனி பொதுவாக ஆகாத நாட்களை பார்ப்போம். கிழமைகளில் ஞாயிறு - திங்கள் ஒரு கண்ணுள்ள நாளாகவும் , புதன்- வியாழன்- வெள்ளி இரு கண்ணுள்ள நாட்களாகவும், செவ்வாய் மற்றும் சனி குருட்டு நாளாகவும் ஆன்றோர் கருதுவதால் குருட்டு நாட்களில் காரியங்களை தவிர்த்து முடிந்தவரை இரு கண்ணுள்ள நாட்களிலும் தவிர்க்க முடியாதபோது ஒரு கண்ணுள்ள நாளையும்; தேர்ந்தெடுப்போம்.

மற்றபடி வளர் பிறை நாட்கள் தேய் பிறை நாட்களைக் காட்டிலும் சிறந்தது. த்யாஜ்யம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தின் வலிமை குன்றிய பகுதி அல்லது நன்மையற்ற பகுதி. திதி, வாரம், நக்ஷத்திரம், லக்னம், மாதம் ஆகிய அனைத்திற்கும் த்யாஜ்யம் உண்டு. மாதத் த்யாஜ்யமே கரிநாளாகும். மற்ற காலப் பகுதிகளில் நாம் த்யாஜ்யம் பார்ப்பதை வழக்கத்தில் கொள்ளாதது போலவே மாதத் த்யாஜ்யமான கரிநாளையும் கருதத் தேவையில்லை என்பது பெரும்பாலோர் கருத்து.

அமாவாசை, ப்ரதமை, அஷ்டமி, நவமி, பெளர்ணமி இவை சுப காரியங்களுக்கு அருகதையற்ற திதிகள்.
சதுர்த்தி, ஏகாதசி, சதுர்த்தசி ஆகியவை மத்திமமான திதிகள்.
த்விதியை, த்ருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, த்வாதசி, த்ரையோதசி இவை மிக உத்தமமான திதிகள்.
தினப்பொருத்தம் அவசியம்:-
பரந்தாமன் பஞ்சாங்கத்தில் 23ம் பக்கம் தாராபலன் பட்டியல் என்ற தலைப்பின் கீழ் நக்ஷத்திர செட்கள் - மற்றும் செட் எண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அஸ்விநி, மகம், மூலம் ஆகிய 3 நக்ஷத்திரங்களுக்கும் 2, 4, 6, 8, 9 ஆகிய செட்களைச் சேர்ந்த 2- பரணி, பூரம், பூராடம், 4-ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், 6-திருவாதிரை, ஸ்வாதி, சதயம், 8-பூசம், அநுஷம், உத்திரட்டாதி, 9-ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 15 நக்ஷத்திரங்களும் தினப் பொருத்தம் உள்ளவை என்று பொருள். இதில் பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, ஆயில்யம், கேட்டை ஆகிய 6 நக்ஷத்திரங்களும் சுபம் செய்ய அருகதையற்றவை ஆதலால் மற்ற 9 நாட்களில் சுப செய்துகொள்ளவேண்டும். இதுபோலவே மற்ற செட்காரர்களும் தங்களுக்குறிய சுபம் செய்ய அருகதையுள்ள தினப்பொருத்தம் உள்ள நக்ஷத்திரங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு சுபங்களைச் செய்யவேண்டும்.

தினப்பொருத்தம் யாருக்குப் பார்க்கவேண்டும்:-
உபநயனத்தில் மட்டும் உபநயனப் பையனுக்கும், ஸீமந்தம், க்ருஹப்ரவேசம், கல்யாணம் ஆகிய அனைத்திலும் பெண்ணுக்கும் தினப் பொருத்தம் பார்க்கவேண்டும். யாருக்கும் சந்திராஷ்டமம் கூடாது. தினப் பொருத்தம் தவிர வேறு எதற்கும் முஹூர்த்தம் பண்ணுகிறவர்களுடைய நக்ஷத்திரம் போன்றவை பயனில்லை.

யோகம் அவசியம் :-
யோகம் மிக மிக முக்கியமானது ஆனால் மிகச் சுலபமானது. பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு தேதியிலும் யோகம் என்ற தலைப்பின் கீழ் அ - சி - ம என்ற எழுத்துக்களால் யோகம் குறிப்பிடப்பட்டிருக்கும். அ - என்பது அம்ருத யோகத்தையும், சி - என்பது சித்த யோகத்தையும், ம - என்பது மரண யோகத்தையும் குறிக்கும். பஞ்சாங்கத்தின் உதவியின்றியே கீழ்க்கண்ட பட்டியலைக்கொண்டு யோகத்தைக் கண்டுபிடிக்கலாம். இந்த கிழமையும், இந்த நக்ஷத்திரமும் உள்ள நாளைக்கு இன்ன யோகம் என்று தெளியவும்.
  அஸ் பர கார் ரோகி ம்ருக திருவா புனர் பூச ஆயில் மகம் பூரம் உத்ர ஹஸ் சித் ஸ்வா
ஞா சி சி சி சி சி சி சி சி சி சி சி சி
திங் சி சி சி சி சி சி சி சி சி
செவ் சி சி சி சி சி சி சி சி சி சி சி சி
புதன் சி சி சி சி சி சி சி சி சி சி
வியா சி சி சி சி சி
வெள் சி சி சி சி சி சி சி சி சி
சனி சி சி சி சி சி சி சி
  விசா அநு கேட் மூல பூரா உத்ரா திஓண அவிட் சதய பூரட் உத்ரட் ரேவ
ஞா சி சி சி
திங் சி சி சி சி சி சி சி சி
செவ் சி சி சி சி சி சி சி
புதன் சி சி சி சி சி சி
வியா சி சி சி சி சி சி சி சி சி சி சி
வெள் சி சி சி சி சி சி சி சி
சனி சி சி சி சி சி சி சி சி சி

Astrological Signs பஞ்சகம் மிக முக்கியம்:- நம் பஞ்சாங்கத்தில் 21ம் பக்கம் பஞ்சகம் என்ற தலைப்பின் கீழ் இந்த விபரம் தரப்பட்டுள்ளது. சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நக்ஷத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம் இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். ப்ரதமை -1, த்விதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்விநி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நக்ஷத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என லக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவ எண் (4 லக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டி பின் 9 ஆல் வகுக்கு வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய பஞ்சகங்களுக்கும் முறையே ரத்னம், சந்தனம், எலுமிச்சை, தீபம், தானியம் இவற்றை தானமாக அளித்து பரிகாரம் செய்து கொண்டு சுபங்கள் செய்யலாம் என்று பல பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகு காலம் எம கண்டத்தில் கவனம் வேண்டும் :-
எல்லாவற்றையும் நன்றாகக் கணித்துவிட்டு கடைசியில் ராகு, காலம் எம கண்டத்தை மறந்துபோய்விடுகிறவர்கள் உண்டு. எனவே நாம் தேர்ந்தெடுத்த லக்னத்தில் ராகு, அல்லது எமகண்டம் வந்தால், ராகு - எமகண்ட காலம் முடிந்த பிறகு லக்னத்தில் பாக்கி உள்ள நேரத்தைக் கொண்டு முஹூர்த்தம் நிர்ணயிக்கவேண்டும்.

சந்த்ராஷ்டம தினங்களில் சுப காரியங்களில் ஈடுபடக்கூடாது:-
நம் பஞ்சாங்கத்தில் 2ம் பக்கம் முதல் தலைப்பு "சந்த்ராஷ்டமம் அறிதல்" - அதன் கீழ் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் சந்திராஷ்டம நக்ஷத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. முஹூர்த்தம் யாருக்காககப் பார்க்கிறோமோ அவருக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாளில் வரும் முஹூர்த்தங்களை விலக்கிவிட்டு மற்ற நாட்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

முஹூர்த்த நிர்ணய க்ரமம் (வரிசை):-
டக் டக்கென்று சுலபமாக முஹூர்த்தம் நிர்ணயம் செய்ய வழி முறைகள்:-
1. எந்தத் தமிழ் மாதத்தில் முஹூர்த்தம் பார்க்கவேண்டுமோ அந்த மாதத்தில் மரணயோகம், செவ்வாய், சனி ஆகியவை உள்ள நாட்களை விடுத்து மற்ற நாட்களை எடுத்து எழுதிக் கொள்க.

2. நம் பஞ்சாங்கத்தில் 23ம் பக்கப்படி தினப்பொருத்தம் உள்ள நக்ஷத்திரங்களில் ஆகாத நக்ஷத்திரங்கள் போக பாக்கி நக்ஷத்திரங்கள் உள்ள தினங்கள், ஆகாத திதிகள் உள்ள தினங்கள், மற்றும் சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள் உள்ள தினங்களை நீக்கிவிடுக. 50 சதவீதம் முடிந்தது.

3. பாக்கித் தேறிய தினங்களில் வளர் பிறையில் உள்ள தினமாகவும், இரு கண்ணுள்ள (புதன், வியாழன், வெள்ளி) நாளாகவும் உள்ள ஒரு நாளை எடுத்துக்கொண்டு, அந் நாளை தமிழ், ஆங்கில தேதிகளுடன் ஒரு பேப்பரில் எழுதிக்கொள்க.

அன்றைய தினத்திற்கு 23ம் பக்கப்படி சூர்ய உதயம் பார்த்து வலது கடைசியில் மணி - நிமிடம் என்ற தலைப்பின் கீழ் எழுதிக் கொள்ளக. அன்றைய தினத்திற்கு பஞ்சாங்கத்தில் "ராசி இரு" என்பதற்குக் கீழ் உள்ள மணி - நிமிடத்தை எடுத்து பேப்பரில் அந்த மாதத்தின் பெயருடன் இருப்பு என (மேஷ இருப்பு -- ரிஷப இருப்பு என்பதுபோல) சேர்த்து எழுதி முன் சூரிய உதய மணி நிமிடங்களுக்கு கீழ் கூட்ட வசதியாக எழுதிக் கொள்ளவும். தற்போது இவை இரண்டையும் கூட்டி 60க்கு மேல் வரும் நிமிடங்களை ஒன்று என்று மணியுடன் ஒன்றைக் கூட்டி 60க்குக் குறைவான நிமிடங்களை நிமிடங்களின் கீழ் எழுதி, மணியைக் கூட்டி மணியின் கீழ் எழுத, ஆரம்ப லக்னம் எத்தனை மணி வரை இருக்கிறது என்ற நேரம் கிடைக்கும். இந்த ஆரம்ப லக்னத்திற்கு ஸ்தான சுத்தம் இருந்து, பஞ்சகம் இருந்து, ராகு, எமகண்டம் நீக்கி போதுமானதாக இருந்தால் இதையே லக்னமாக வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் 21ம் பக்கம் உள்ள ராசிகளுக்கான கால அட்டவணையில் இருந்து அடுத்த லக்னத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள மணி நிமிடங்களை எடுத்து எழுதிக்கொண்டு கூட்டினால் அடுத்த லக்னத்தின் முடிவு நேரம் கிடைக்கும். இது போல் தேவையான லக்னம் கிடைக்கும் வரை எடுத்து எழுதிக்கொண்டு கூட்டிக்கொள்ளவேண்டும்.

4. தோராயமாக லக்னத்தை நிர்ணயித்தபின், லக்னத் துருவம் உள்ள லக்னங்களுக்கு துருவ எண் கூட்டி லக்ன எண், திதி எண், கிழமை எண், நக்ஷத்திர எண் இவற்றைக் கூட்டி 9 ஆல் வகுத்து மீதி 0, 3, 5, 7, 9 ஆகிவற்றில் ஒன்றாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். பஞ்சகம் இவற்றில் ஒன்றாக அமையாவிட்டால் வேறு லக்னம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா என பார்க்கவேண்டும். பகல் 12 மணிக்குப் பிறகு க்ருஹப்ரவேசம் தவிர மற்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. வேறு லக்னத்திற்கு வாய்ப்பின்றி, வேறு நாளிலும் செய்ய வழியில்லாத போது பஞ்சகப் ப்ரீதி பண்ணி சுபம் பண்ணலாம்.

இதுபோலவே கணக்கீடு செய்து நம் பஞ்சாங்கத்தில் அனைத்து முஹூர்த்த நாட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 12.04.2007ம் தேதிக்கு ஒரு உதாரண லக்னக் கணக்கீட்டை கீழே பார்ப்போம். விவாஹத்திற்கு லக்னம் அமைப்பதாகக் கொள்வோம். 12ம் தேதி, சித்த யோகம், வியாழக் கிழமை, தசமி திதி, திருஓண நக்ஷத்திரம் எனவே யோகம், கிழமை, திதி, நக்ஷத்திரம் நன்றாக உள்ளன. இனி காலை 6.00 - 07.30 எம கண்டம் தவிர்த்து லக்னம் வைக்கவேண்டும்.

ஆங்கில தேதி தமிழ் தேதி விபரம் மணி நிமிடம் கூட்டல்  குறிப்பு
12.04.2007 வ்யய வரு பங்குனி 29 வியாழக் கிழமை சூரிய உதயம் 23ம் பக்கம் ஏப்-14 படி

06

01 06.01 கல்யாணத்திற்கு 7மிடம் சுத்தம் அவசியம்
    ஆரம்ப லக்னம் - (பங்குனி) - மீன இருப்பு 00 08 06.09 06.09 வரை மீனம்
    அடுத்த லக்னம் - மேஷம் (21ம் பக்கப்படி) 01 49 07.58 07.58 வரை மேஷம்.  விவாஹத்திற்கு மேஷம் கொடுக்கப் படவில்லை (21ம் பக்கம் சிறந்த அம்சங்கள்)
    அடுத்த லக்னம் - ரிஷபம் (21ம் பக்கப்படி) 02 02 10.00  ரிஷபத்திற்கு 7மிடத்தில் குரு எனவே சுத்தமில்லை.
    அடுத்த லக்னம் - மிதுனம் (21ம் பக்கப்படி) 02 11 12.11 12.11 மணி வரை மிதுனம்.
  மிதுனத்திற்கு பஞ்சக கணிதம்:
திதி -              தசமி      - 10
வாரம்          வியாழன் -  5
நக்ஷத்திரம் தி.ஓண    - 22
லக்னம்      மிதுனம்     -  3 (துருவமில்லை)
ஆக மொத்தம்            - 40
9ஆல் வகுத்தால் பாக்கி 4 - ராஜ பஞ்சகம்
எலுமிச்சை தானம் செய்து சுபம் செய்யலாம்.     
எனவே  10 முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் முஹூர்த்தம் வைத்து குறிக்கப்பட்டுள்ளது.
நாழிகைக் கணக்கு இனி தேவையே இல்லை. நாழிகையில் குறிப்பிட வேண்டும் என்று சம்பிரதாயமோ சாஸ்திரமோ இல்லை.
முஹூர்த்த குறிப்பு:- ஸ்வஸ்தி ஸ்ரீ, வ்யய வரு, பங்குனி மாதம், 29ம் தேதி (12-04-2007) வியாழக் கிழமை திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மிதுன லக்னத்தில் .... தினப்பொருத்தம் உள்ள யாதொரு கன்னிகைக்கும், சந்திராஷ்டமமற்ற யாதொரு வரனுக்கும் விவாஹம் செய்ய உத்தமம்.
Astrological Signs மேலும் உங்களுக்கு இதுபற்றிய சந்தேகம் இருந்தால் எந்தவித தயக்கமோ, கூச்சமோ இன்றி, தொந்தரவு செய்கிறோம் என்று எண்ணாமல், பலர் பயனடைய நாமும் சிறிது உதவிசெய்வோம் என்ற நோக்கத்தில் எழுதி அனுப்புங்கள். உங்களைப்போன்றே சந்தேகம் உள்ளவர்கள் நிறைய இருக்கக் கூடும். அவற்றையும் விளக்கி இதே பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் பயனடையச் செய்வதே நமது நோக்கம். அதுபோல் இது விஷயத்தில் அடியேனைக் காட்டிலும் பல மடங்கு விபரம் தெரிந்தவர்கள், மேலும் சுலபமாகவும் தெளிவாகவும் விளக்கக் கூடியவர்கள் இதை கண்ணுற நேர்ந்து, அவர்களுக்கு நேரமும், உதவிசெய்ய மனமும் இருந்தால் இதைவிட மேம்பட்ட ஒரு  கட்டுரையை கைமாறு கருதாமல் எழுதி அநுப்புவார்களேயாகில் சிரம் தாழ்ந்து நமஸ்கரித்து  ஏற்றுக்கொண்டு வெளியிடச் சித்தமாக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் (கொள்கிறேன்).
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!