| 
                        
                            
                        
                     
                        
                            
                            |  | 
                                            
    
	   
		  | 
				
				    |  | திருப்பள்ளியெழுச்சி |  
				    |  | தனியன்கள் |  
				    |  | தமேவமத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவ தர்ஹணீயம்
 ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
 பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
 |  
				    |  | மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த் தொண்டரடிப்பொடி தொன்னகரம் -- வண்டு
 திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
 யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
 
 |  
				    |  | *கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிருளகன்றது காலையம்பொழுதாய்
 மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
 வானவரரசர்கள் வந்துவந்தீண்டி
 எதிர்திசை நிறைந்தனரிவரொடும்புகுந்த
 இருங்களிற்றீட்டமும் பிடியொடுமுரசும் அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும் அ
 ரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --- (1)
 
 கொழுங்கொடிமுல்லையின் கொழுமலரணவிக்
 கூர்ந்தது குணதிசைமாருதமிதுவோ
 எழுந்தன மலரணைப்பள்ளிகொள்ளன்னம்
 ஈன்பனி நனைந்த தமிருஞ்சிறகுதறி
 விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
 வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
 அழுங்கியவானையின் அருந்துயர்கெடுத்த
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(2)
 
 சுடரொளிபரந்தன சூழ்திசையெல்லாம்
 துன்னியதாரகை மின்னொளிசுருங்கிப்
 படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
 பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
 மடலிடைக்கீறி வண்பாளைகள்நாற
 வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(3)
 
 மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
 வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
 ஈட்டியவிசைதிசை பரந்தனவயலுள்
 இரிந்தன சுரும்பினமிலங்கையர் குலத்தை
 வாட்டியவரிசிலை வானவரேறே!
 மாமுனிவேள்வியைக் காத்து,
 அவபிரதமாட்டியவடுதிரலயோத்தியம்மரசே!
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(4)
 
 புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
 போயிற்றுக்கங்குல் புகுந்ததுபுலரி
 கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
 களிவண்டுமிழற்றிய கலம்பகம்புனைந்த அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான் அமரர்கள்புகுந்தனராதலிலம்மா!
 இலங்கையர்கோன்வழிபாடு செய்கோயில்
 எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. ---(5)
 
 இரவியர் மணிநெடுந் தேரொடுமிவரோ
 இறையவர் பதினொருவிடையருமிவரோ மருவியமயிலினனறுமுகனிவனோ
 மருதரும் வசுக்களும் வந்துவந்தீண்டிப்
 புரவியோடாடலும் பாடலும் தேரும்
 குமரதண்டம் புகுந்தீண்டியவெள்ளம்
 அருவரையனைய நின் கோயில்முன்னிவரோ
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(6)
 
 அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
 அருந்தவ முனிவரும் மருதருமிவரோ
 இந்திரனானையும் தானும் வந்திவனோ
 எம்பெருமான்! உன் கோயிலின் வாசல்
 சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
 இயக்கரும் மயங்கினர் திருவடித்தொழுவான் அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --(7)
 
 வம்பவிழ் வானவர் வாயுறைவழங்க
 மாநிதிகபிலையொண் கண்ணாடிமுதலா
 எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
 ஏற்பனவாயின கொண்டுநன்முனிவர்
 தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ
 தோன்;றினனிரவியும் துலங்கொளிபரப்பி அம்பரதலத்தினின்றகல்கின்றதிருள்போய்
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(8)
 
 ஏதமில்தண்ணுமையெக்கம் மத்தளி
 யாழ்குழல் முழவமோடிசைதிசை கெழுமிக்
 கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
 கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
 மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
 சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்
 ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
 அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(9)
 
 * கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
 கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ
 துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
 துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
 தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து
 தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் -- அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு ஆட்படுத்தாய்
					   பள்ளியெழுந்தருளாயே. --- (10)
 
 அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி. ழூ 
						  *இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும
 
 |  
				    |  |  |  
				    |  |  |  
				    |  |  |  
				    |  |  |  |  | Donate Us 
 
 
                                    
                                    
                                 |  
                            | 
                                    
                                        தங்கள்
                                    வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
                                            | Copyright (c) 2011 www.ahobilam.com      
                                                              Web site does
                                                        not belong to any Mutt or Ashram!          
                                                       Privacy Policy | Disclaimer |  |  |